Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 SEP 1943
மறைவு 29 APR 2019
அமரர் சுப்பிரமணியம் இராசையா
வயது 75
அமரர் சுப்பிரமணியம் இராசையா 1943 - 2019 காரைநகர் புதுறோடு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(யோகு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அருட்செல்வன்(கனடா), அனுஷா(லண்டன்), அகிலன், இளங்கோ ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று நிலாவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்