Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1940
இறப்பு 10 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம்
SK ஓய்வுநிலை களஞ்சிய முகாமையாளர்
வயது 79
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம் 1940 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபாலசிங்கம் அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிந்தாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கன்(கனடா), துஷியந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உஷானி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், சிந்தாமணி, நாகம்மா, கமலம், தில்லாத்தைப்பிள்ளை மற்றும் கந்தையா, பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, பொன்னம்மா, முத்துக்குமாரு, கணபதிப்பிள்ளை, முருகேசு, கணபதிப்பிள்ளை, கோமளம் மற்றும் பூரணம், நாகரத்தினம், நாகசுந்தரி, கண்மணிப்பிள்ளை, புஸ்பராணி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிங்ஸ்ரன், ஏறன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 09 Jan, 2021