Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 02 APR 1937
விண்ணில் 19 MAY 2024
திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை (சுபத்திராதேவி)
வயது 87
திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை 1937 - 2024 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வேலணை, பிரித்தானியா Leicester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் உருவம் நீ அம்மா
 எம்மை அவனியில் ஈன்ற தாய் அம்மா
 அழுதிடும் குழந்தைகளாகய் நாம் இன்று
 எம்மை ஆறுதல் படுத்த யார் உண்டு
விழித்தெழும் வேளையெல்லாம் உங்கள் முகம் கண்டு
 பெரும் விடிவு வந்ததம்மா நம் வாழ்வில்
 துடித்தெழுந்து பதைத்து போனோம் அம்மா
 உங்கள் துயர செய்தி காதில் கேட்டு
 உறக்கத்தில் உங்கள் உயிர் பிரிந்தாலும்
 உயிர் வரை வலிக்குதம்மா உங்கள் பிரிவு
 பேரக்குழந்தைகளும் உங்களை தேடுதம்மா
 தங்கள் பேச்சிற்கு துணை இன்றி வாடுதம்மா
 உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்,
பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-06-2024 செவ்வாய்கிழமை அன்று leicester England எனும் முகவரியில் நடைபெறும்.


இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருபாகரன் - மகன்
யோகேந்திரன் - மகன்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.