

யாழ். மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சாந்தா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அமரர் சுப்பிரமணியம் சாந்தா
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.