Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 13 AUG 1939
உதிர்வு 24 APR 2024
திருமதி சுப்பிரமணியம் நாகம்மா 1939 - 2024 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், விநாயகபுரம் துணுக்காயை வசிப்பிடமாகவும், அணிஞ்சியன்குளம் மல்லாவியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று 31 நாட்கள் ஆனதே
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!

எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உள்ளமிது குமுறுகிறதே
உங்கள் மடிதேடி ஏங்குதே
அன்னையே… அன்பு அம்மாவே
எம் ஆருயிரே…
அருவியாய் அழுது தீர்த்தாலும்
ஆறாது தாயே உங்கள் பிரிவு..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.