Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 JUN 1935
இறப்பு 29 JUL 2018
அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை
வயது 83
அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை 1935 - 2018 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கூர் 5ம் வட்டாரம் நெளிவினி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!

பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

அடிமுடி அறியமுடியா அற்புதமே!
தாலாட்டி சோறூட்டி வளர்த்த சொற்பதமே!
தினம் தொழுகின்றோம் உன் பொற்பாதமே!

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

மகள்- தனேஸ்வரி(தனா), மருமகன்(ஞானசேகரம்(ஞானம்), அம்மம்மா பேரன்- திருஜன்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute