Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 01 JUN 1934
இறைவன் அடியில் 26 SEP 2024
திருமதி ஶ்ரீரங்கநாயகி சபாரெத்தினம்
வயது 90
திருமதி ஶ்ரீரங்கநாயகி சபாரெத்தினம் 1934 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ரொரன்ரோ, கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறிரங்கநாயகி சபாரெத்தினம் அவர்களின் 31ஆம் நாள் நினைவு வணக்கமும் நன்றி நவிலலும்.

பெற்றெடுத்துத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்தவளே
நேற்றிருந்த வானமும் தாரகைகளும் இன்றும் இருக்கின்றன.
எங்கள் தாயவளே, நீங்கள் மட்டும் எங்கேயம்மா சென்றீர்கள்?

தாய்க்குரிய கடமைகளை இனிதே முடித்தேன் என்று,
தந்தை, தாய், உடன்பிறந்தார், உன்னவன் உடனிருக்க
வேண்டும் என்றா சென்றாயம்மா?

 அம்மா என்று இனியாரை நாம் அழைப்போம்?

தென்பெருந்துறை சதானந்த சிவனின் தாளில்
பணிந்து, ஆழ்ந்து உறங்குங்கள் அம்மா.
ஓம் நமசிவாய!

எமது தாயாரின் இறப்புச் செய்தியறிந்து நேரிலும், தொலைபேசியிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் கூறிய அனைவருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாற்றியவருக்கும், உணவளித்து உடனிருந்து துயராற்றிய அனைத்து அன்பு உறவுகளுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று யாழ். புங்குடுதீவு 2 தென்பெருந்துறை ஆழ்கடலில் நடைபெறும். 31ஆம் நாள் கிரியைகள் 26-10-2024 சனிக்கிழமை அன்று புங்குடுதீவு தென்பெருந்துறை சதானந்த சிவன் கோவிலில் சிறப்புப் பூசையோடு விருந்தோம்பலும் நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.