Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1961
இறப்பு 25 DEC 2019
அமரர் ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம்
பிரதம நூலகர்- யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர்- இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் நூலக ஒன்றியம், இலங்கை நூலகச் சங்கம்
வயது 58
அமரர் ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம் 1961 - 2019 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்படமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோப்பாயைச் சேர்ந்த பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்மணிநாயகம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற அருளானந்தம், ஜெயலக்‌ஷ்மிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

குபேரானந்தஉதயன்(உத்தமன்-கனடா), ஸ்ரீகாந்தரூபி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தலக்‌ஷ்மி(மானா- ஆசிரியை), ஆனந்தவதனி(லண்டன்), குகதாஸ்(கனடா), காலஞ்சென்ற முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியதர்சினி(கனடா), சிவானந்தராஜா(பிரான்ஸ்), சிவாஸ்காந்தன்(வர்த்தகர்- உரும்பிராய்), சிவரூபன்(லண்டன்), ஜெனித்தா(கனடா), கமலராணி(ஓய்வுபெற்ற அதிபர் இராமநாதன் கல்லூரி), சிவகுமார்(சி-க-கூ- சங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யுதிஸ்ரானந்த், அதிஸ்ரா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

ஆரபி, ராம், குந்தவி, ஆதீசன், ஆரூசன், அபிசயன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அன்னபூரணம், சின்னதங்கச்சி, சரஸ்வதி, ஸ்ரீகாந்தராஜா(செட்டியார்), சிறிகரராஜா(சிறி), பரமேஸ்வரன்(நல்லதம்பி- கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லதுரை, ஸ்ரீகாந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2019 வெள்ளிக்கிழமை ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்