
யாழ். உரும்பிராய் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சோதி இராசநாயகம் அவர்கள் 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை(தபால் அதிபர்) அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசநாயகம்(அத்தான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காயத்திரி(கெளரி- பிரித்தானியா), அனுராதா(அனு- Teacher Methodist College, Colombo-03), லாயிஷா(ஈசா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குலமணி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீபரணீதரன்(பரணி- பிரித்தானியா), கணேஷ்(Ceylinco General Insurance), சந்திரதீபன்(தீபன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷயா, றுபீஷ், யதுஷ், லாகித்தியா, பிரனேஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற சிவபாதம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற கனகநாயகம், மகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபாஜினி(குஞ்சா), சாந்தினி, குமுதினி, வாலாம்பிகை, வசந்தன் ஆகியோரின் அன்பு அன்ராவும்,
தபோரஞ்சினி அவர்களின் அன்பு மாமியும்,
கெளதமன், இராகுலன், பகீரதி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thank you all so much for your thoughts and prayers. Many thanks, Rasanayagam, Gaithirie, Anuratha, Laesha, Parane, Ganesh and Theepan