யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகலா சுந்தரமூர்த்தி அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(முன்னாள் ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பவாநந்தன், வசுமதி, சசிகலா, சிறீகாந்த் மற்றும் நிர்மலா(அவுஸ்திரேலியா), தாரணி(கனடா), மேகலா(பிரான்ஸ்), நளினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியேஸ்வரி(டென்மார்க்), இராசநாயகம்(இலங்கை), கிருபாதரன்(அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன்(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மணற்பிட்டி இடுகாட்டில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரான்சில் வாழும் திருமதி ரஞ்சன் ரஜனி குடும்பத்தினரின் இதயம்கனத்த இரங்கல்... அமரர் சுந்தரமூர்த்தி அவர்களின் புதல்வி, எனது அன்புத்தோழியும்,குடும்ப உறவுமாவார்....