

யாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராஜேஸ்வரி அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(விதானையார்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(Rtd Assist Commissioner of motor trafic) அவர்களின் அன்பு துணைவியும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் (முன்னாள் றெட்பானா உத்தியோகத்தர்), ஜெயராணி, ஜெயகெளரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி(சுங்க இலாகா), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினி(லண்டன்), தனபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாக்கியம்(ஒய்வுநிலை சாவகர், யாழ்ப்பாணம்), ஜெகநாதன்(Rtd GM, MPCS- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற Dr.சிவனேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவராம்(மருத்துவபீட இறுதியாண்டு மாணாவன்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!