புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, புங்குடுதீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் மகேசன் சிவானந்தன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சிவசுப்பிரமணியம்(Town Council Secretary), இரட்ணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரும்பர்சின்னத்தம்பி செங்கமலம்(புங்குடுதீவு 7ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி(புங்குடுதீவு 7ம் வட்டாரம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சர்மினி(தாதிய உத்தியோகத்தர் - கனடா, Eastern University - Srilanka, National identity card office - Colombo) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஹெண்டா அன்ரனி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
நவீன்(Metropolitan faculty of Eng), பவானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இரட்ணேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, ஜெதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டக்களப்பு (கல்வியங்காடு) இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94652225197
- Mobile : +12899883864
- Mobile : +14166288705