Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 27 MAY 1927
விண்ணில் 02 AUG 2019
அமரர் சிவசம்பு பரமசிவம் 1927 - 2019 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாய் சீரனி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பரமசிவம் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயனன்(அமுதன்- பிரான்ஸ்), உதயசீலன்(உதயன்), மாவீரர் வெண்ணிலா(முரசுமோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்பலம், சிவராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி, பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரட்சனா, ராதயன், கயல்விழி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப  04:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 01 Sep, 2019