
யாழ். நீர்வேலி வடக்கு காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா
சென்னையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவராசா பரமேஸ்வரி அவர்களின் 10ம்
ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் சிவராசா(கணவர்- நீர்வேலி), சிவநாதன்(மகன் -பிரான்ஸ்), கௌரி(மருமகள்- பிரான்ஸ்),
பேரப்பிள்ளைகள்- சூரியா(பிரான்ஸ்), ஷாருன்(பிரான்ஸ்), சுஜீத்(பிரான்ஸ்)