
வவுனியா நெடுங்கேணி பெரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், புளியங்குளம் பெரியமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் சத்தியசீலன் அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் நாகம்மா தம்பதிகள், சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவபாதம் தவமணிதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், அமிர்தலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,
நிஷாந்தினி(நிஷா) அவர்களின் அன்புக் கணவரும்,
வ\நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்களான ச.மிதுர்சன்(தரம்-09), ச. ஆர்த்தியா(தரம்-05), ச.ஆரணியா(தரம்- 03) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லண்டனைச் சேர்ந்த புஸ்பலதா(சுகந்தி), ஜெயசீலன்(சிவா), பத்மசீலன்(சுதன்), சுசீலன்(கஜந்தன்) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
நிலோஜினி(பிரான்ஸ்), அனோஜன், அனந்தினி, சுரேஸ், யோகராணி, அனு, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறீகாந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,
லண்டனைச் சேர்ந்த அட்சயா, அபிரன் ஆகியோரின் இளைய மாமனாரும்,
லஜினன், ஹர்ணிகா, அனிஸ், அகில், பிரிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சமிரா, சஜின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details