2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிவபாக்கியம் சேதுகாவலர்
1938 -
2021
புதுக்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் சேதுகாவலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:01/04/2023.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
எம் தாயின் கருவறையில் மட்டும்
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்