

யாழ். சுன்னாகம் தெற்கு கதிரமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராசையா அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
தம்பிரத்தினம்(தம்பி பழக்கடை) அவர்களின் அன்புத் தாயாரும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,
தர்மினி- பத்மநாதன், தசன், மாலினி- நவீனன், மயூரன்(சனா), கோகுலன்- உஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
ஹர்சன், ஹிருதயா, ஜெய்சித், நர்த்தனா, பவிஷனா, சஞ்ஜெனா, பிருத்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தனலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகலியும்,
தங்கம்மா, சுப்பிரமனியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சரஸ்வதி, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்க்கிரியை 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.