Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 MAR 1936
இறப்பு 20 AUG 2024
திருமதி சிவநாயகி அற்புதராஜா 1936 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் முருகன் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவநாயகி அற்புதராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய் பாசத்தின்
பிறப்பிடமாய் அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கே

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 19-09-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மண்டபத்தில் (Bambalapitty Flats Community Center Hall) நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் கலந்துகொண்டு அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதர்சன் - மகன்
சுதர்சன்(Whats app) - மகன்
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.