யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் வைத்தியநாதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
என்ற வள்ளுவரின்வாக்கிற்கிணங்க,
மண்ணுலகை விட்டுப் பிரிந்தாலும், காலங்கள் பல கடந்து சென்றாலும்,
கொண்ட கோலங்கள் நிலைமாறிப் போனாலும்,
காலத்தால் அழியாது உங்கள் ஞாபகங்கள்!
நிறைவான செல்வம் நீங்கள்!
கரம்பிடித்தவளையும், பெற்ற பிள்ளைகளையும், கூடப்பிறந்தவர்களையும்,
மற்ற உறவுகளையும் தவிக்கவிட்டு சென்ற உங்களை எப்போ நாம் காண்போம் இனி??
பிறப்போடு இறப்பும் இணைந்ததுவே!
எனினும் உங்கள் இழப்பை ஏனோ எம் நெஞ்சம் ஏற்க மறக்கிறதே!
உங்கள் ஆத்மா ஈடேற்றம் பெற அனைவரும் ஒன்றிணைந்து இறையடி தொழுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தி பெறட்டும்!!!
ஓம் சாந்தி! சாந்தி!சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.