Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 16 AUG 1973
இறப்பு 19 AUG 2020
அமரர் சிதம்பரநாதன் பிரபாகரன் (பிரபா)
ஆயுள் காப்புறுதி முகாமையாளர்
வயது 47
அமரர் சிதம்பரநாதன் பிரபாகரன் 1973 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதன் பிரபாகரன் அவர்களின் 39ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னார், சிதம்பரநாதன் பங்கயவதனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரிசியலிங்கம், தவச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன், சுதாகரன், கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனசீலா, காந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோஜி அவர்களின் அன்பு மைத்துனரும்,

கோகுல், ஹரிதாஸ்(பாபு) ஆகியோரின் அன்பு மச்சானும்,

காமராஜன் அவர்களின் அன்புச் சகலனும்,

தர்சா, தனு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

39 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

இடியென வந்த செய்தி எம் இதயத்தில் இறங்கி
உயிர்நாடி வரை அது ஊர்ந்து சென்றதுவோ
இனி எங்கே காண்போம்
கனிவான உன் பார்வையும் புன்னகை தவழும்
உன் பூ முகமும் இன்றி அடங்கி போனது என்
கதி கலங்கி நிற்கின்றோம்
கண்ணீர் காணிக்கையாக்குகின்றோம்
நீங்காத கண்ணீருடன் துயரத்தில் வாடும்.. 

அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
நீங்கள் இல்லாத இந்த உலகம் எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்

உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: இரிசியலிங்கம் குடும்பத்தினர்