
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா சபாரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், தொண்டைமானாறைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசாமி, இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகநாதன், ஸ்ரீவிஜயநாதன், ஸ்ரீகதிர்காமநாதன், சிதம்பரநாதன், யோகேஷ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, செல்வரட்ணராஜா, சற்குணநாதன், குணரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜமுனாராணி, கல்பனா, கவிதா, சுரேகா, நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்சன், தனோஷ், குருபரன், பிரதீஸ், அபிராமி, கரன், லக்ஷா, ஸ்ரீவாணி, ராகவி, ஸ்ரீபவன், சஞ்சய், சஞ்சனா, சர்ச்சிகா, சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
ஐயா! உங்கள் பாசம் நிறைந்த முகத்தைப் பார்க்காமலும்
கனிவு நிறைந்த குரலையும் கேட்காமலும்
கடந்த 31 நாட்களாக எல்லோரும் ஏங்கித் தவிக்கின்றோம்
எங்களுடன் நிங்கள் வாழ்ந்த நாட்கள்
மீண்டும் வராதா என்று
தினமும் கண்கலங்கித் தேடுகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும்
மகன்மார், மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ....
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 14-10-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் குசலைபங்கதேனியா நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.