Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 SEP 1955
மறைவு 09 OCT 2022
அமரர் சின்னையா புஸ்பராசா
ஓய்வுபெற்ற அதிபர்- வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயம், யா/கோப்பாய் மகா வித்தியாலயம்
வயது 67
அமரர் சின்னையா புஸ்பராசா 1955 - 2022 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில், மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா புஸ்பராசா அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் க.நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உசாதேவி(ஓய்வுநிலை ஆசிரியை- மகாஜனக் கல்லூரி, அருணோதயக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா(கிராம அலுவலர்- தச்சடம்பன் ஒலுமடு) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சன்ஜீவன்(விரிவுரையாளர்- இலங்கை ஜேர்மன் பயிற்சி கல்லூரி, அறிவியல் நகர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

வாகீஸ் அவர்களின் அன்புப் பேரனும்,

சரஸ்வதி(கனடா), சாந்தகுமாரி(ஜேர்மனி), கமலகுமாரி(வவுனியா), காலஞ்சென்றவர்களான அழகராசா, வரதராசா மற்றும் தியாகராசா(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதாபக்தி(நில அளவையாளர்- கனடா), சிவராசா(ஜேர்மனி), சிவராசா(வவுனியா), கெளரி(கனடா), தவராணி(கொழும்பு), வேதநாயகன்(ஓய்வுநிலை மாவட்ட அரசாங்க அதிபர்- யாழ்ப்பாணம்), கேதீஸ்வரன்(அதிபர்- யா/அருணோதயக் கல்லூரி), மனோகரி(ஆசிரியர்- யா/யூனியன் கல்லூரி), திவாகரி(பொட்சுவானா), தயாநிதி, கலாமதி(பேராசிரியர்- யாழ் பல்கலைக்கழகம் மருத்துவபீடம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்பிரமணியம் மவுலேஸ்வரி(பளை) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

சத்தியவதி(கனடா), சந்திரவதி(கனடா), அகல்யா(ஜேர்மனி), சிவாகரன்(அவுஸ்திரேலியா), சிவாஜினி(வவுனியா), காலஞ்சென்ற சுதாஜினி, சுதர்சன்(அவுஸ்திரேலியா), சுதாகரன்(வவுனியா), கமலாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிறேமிலன்(கனடா), குறிஞ்சி(கனடா), குமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

நிலா, தரன், துளசி, ஓவியா, சிவன், காலஞ்சென்ற டினோஜன், தீபிகா, சர்விகன், அஜய், ஆதிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2022 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் பொற்பதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சன்ஜீவன் - மருமகன்
உசாதேவி - மனைவி
சரஸ்வதி - சகோதரி
தியாகராசா - சகோதரன்
சாந்தகுமாரி - சகோதரி
கமலகுமாரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices