Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 JUL 1958
இறப்பு 13 AUG 2024
அமரர் சின்னத்தம்பி கந்தசாமி 1958 - 2024 மல்லாகம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.

மாதம் ஓன்று ஆனாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லை அப்பா
நீங்காத நினைவு தந்து
 நீண்ட தூரம் சென்றதேன் அப்பா
 கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என
நினைக்கும் முன்னே நீங்கள்
 மறைந்தது ஏனோ அப்பா
விழி நீர் துடைக்கவும் உங்கள் கரங்கள்
தான் இல்லையப்பா

கண்ட பல கனவிலும் வந்து வந்து போகுதடா
 உன் ஆசை நினைவுகள் எல்லாம்
வாழ்ந்த கதை முடியும் முன்னே
நீங்கள் வாழாமல் மாய்ந்ததேனோ அப்பா!

பூங்காவாய் இருந்தீங்களே அப்பா
பறைவையாய் பறந்து விட்டீங்க
பூக்கள் எல்லாம் வாடிவிட்டோம்
பூ முகத்தை தேடுகின்றோம் அப்பா!
எப்போ எங்களிடம் வருவீங்க அப்பா

உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
 ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீங்க அப்பா!

மாதங்கள் ஓடினாலும் உன் நிலவுமுகம் எங்கள்
 மனதிலிருந்து மாறாதப்பா! உதிர்ந்து போனாலும்
 உருக்கும் உங்க நினைவுகள் எம் உள்ளத்திலிருந்து
 என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடை பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, பின்னர் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அன்னாரில் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute