Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1943
இறப்பு 31 JAN 2019
அமரர் சின்னத்தம்பி சற்குணராஜா
முன்னாள் ஸ்ரான்லி றோட் சற்குணராஜா & Co உரிமையாளர்
வயது 75
அமரர் சின்னத்தம்பி சற்குணராஜா 1943 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதி, சென்னை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சற்குணராஜா அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் ஆருயிர் மைந்தனும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம், அன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவிதா(பிரித்தானியா), திரிவேணி(அவுஸ்திரேலியா), விஜயதர்சினி(பிரித்தானியா), கார்த்திக்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ்குமார்(பிரித்தானியா), ஜெயேந்திரா(அவுஸ்திரேலியா), குகநாதன்(பிரித்தானியா), பிரியங்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷயன், அனிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-02-2019 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்