
யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் பழைய வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் 03-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
லீலாவதி(இலங்கை), செல்வராசா(லண்டன்), விமலா சின்னக்கா(இலங்கை), துரைராசா(பிரான்ஸ்), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம், இரத்தினம், சொர்ணம்மா, இராசையா, பாக்கியம், தங்கம்மா மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியநாதன்(இலங்கை), சிவகுமாரன்(இலங்கை), சாரதா(லண்டன்), ஜெயகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாந்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), வசந்த்(பொறியியலாளர்- இலங்கை), லக்ஷனா(யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்- இலங்கை), அபிந்தா(ஆசிரியர்- லண்டன்), அபிலாசன்(பல்கலைக்கழகம்- பரிஸ்), அஸ்வீகன்(உயர்நிலைப்பள்ளி மாணவர்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கோப்பாய் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.