யாழ். கரவெட்டி கிழக்கு கிழவிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசகோபாலன் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற ஐயாத்துரை, லஷ்மி(சின்னமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநேசம் அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுலராம் அவர்களின் அன்புத் தந்தையும்,
இராசநாயகம்(ஓய்வு பெற்ற அதிபர்), இராசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராசா(ஓய்வுநிலை அதிபர்), செல்வராசா(ஓய்வு பெற்ற ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர்), தங்கராசா(ஓய்வு பெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர்), சிவராசா(கனடா), தவராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவா(லண்டன்), மோகன்ராஜ்(இலங்கை), நந்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிசாந்தி(இலங்கை), ஜெயப்பிரகாஷ்(லண்டன்), மோர்சிபவன்(இலங்கை), மேனகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கிழவிதோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779569813
- Phone : +94777706634
- Mobile : +447816964146
- Mobile : +16314080989
- Mobile : +16474714625
அன்பு மாமா, நீங்கள் எங்களை விட்டு சென்றது எனக்கு இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள்தான் எங்களை அன்பும், அறிவும், தைரியமும் மிக்க மனிதர்களாக வளர்த்தீர்கள். எங்கள் இதயத்துக்கு எப்போதும் மிக அருகில்...