

-
14 MAR 1937 - 27 FEB 2019 (81 age)
-
பிறந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகவடிவேலு அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
வெண்ணிலா(ஆசிரியை- முஸ்லிம் மகாவித்தியாலயம், வவுனியா), காண்டீபன்(பிரித்தானியா), நம்பி(Engineer- பிரித்தானியா), செந்தூரன்(Engineer- பிரித்தானியா), ஆதவன்(Engineer- பிரித்தானியா), பிரகலாதன்(Bachelor of Science- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுந்தரம்(Engineer- ஸ்ரீலங்கா டெலிகாம் வவுனியா), ஜெசிந்தா(பிரித்தானியா), இந்துமதி(பிரித்தானியா), கார்த்திகா(பிரித்தானியா), அறிவொளி(பிரித்தானியா), தமிழ்ச்செல்வி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா(ஆசிரியை), சின்னத்தங்கம்(ஆசிரியை), மகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் வீரகத்தி, நமச்சிவாயம்(ஆசிரியர்), கிருஸ்ணபிள்ளை, சிதம்பரநாதன்(நிலஅளவையாளர்) மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற பார்வதிதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(பொலிஸ் உத்தியோகத்தர்), மகாலிங்கசிவம்(ஓய்வுபெற்ற அதிபர்), மற்றும் புனிதவதி, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr. தேனுகா, ஜனனி, சுஜன்(பிரித்தானியா), லக்ஸனா(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா), விதுனா(பிரித்தானியா), யதுனா(பிரித்தானியா), சதுர்ஷன்(பிரித்தானியா), சுபீக்ஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கவுந்தில், கரவெட்டி கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
When we lose a loved one here on earth, we gain an angel in heaven that watches over us. May you take comfort in knowing that you have an angel to watch over you now. We/I extend our/my most...