Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1945
இறப்பு 30 NOV 2018
அமரர் சின்னப்பு ஜோசப் செல்வநாயகம்
உரிமையாளர் - ஆசீர்வாதம் ஸ்ரோர்ஸ் ஆசீர் வணிக நிலையம்
வயது 73
அமரர் சின்னப்பு ஜோசப் செல்வநாயகம் 1945 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு ஜோசப் செல்வநாயகம் அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, சூசானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரப்பியப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மாகிறேற், காலஞ்சென்றவர்களான ஞானம்மா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அலெக்ஸ் நிக்ஸன்(ஆசிர் வணிக நிலையம்), காலஞ்சென்ற றெக்ஸ் ராஜ்குமார், அனிற்றா, ரஜீவ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபத்திரா, கிருபாகரன் சேவியர்(ஆசிரியர்- நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி), வினோதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வநாயகம், அருளானந்தம், காலஞ்சென்ற இம்மானுவேல், வேதநாயகம், சிங்கராசா, ஜெயநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றெக்ஸ் ஹரிஸ், அக்‌ஷயா, றோஷன், றேஷ்மி, சஞ்சுதன், ஜொவினா, ஜெலைனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 03-12-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புனித திரேசாள் ஆலயத்தில்(றக்காவீதி) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்