1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சின்னப்பா வள்ளிப்பிள்ளை
1934 -
2019
கைதடி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பா வள்ளிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
பாசத்தின் முகவரியாய்
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
எங்களை வழி நடத்தி
வாழ வைத்த தெய்வமே
அருட்பெரும் சோதியில்
ஒன்றறக் கலந்து ஓராண்டு
ஓடி மறைந்தனவே அம்மா
ஓராண்டல்ல நூற்றாண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் நீங்காது அம்மா
எங்கள் எல்லோருடை கண்ணீர்ப் பூக்களால்
உங்கள் பாதங்களை அர்ச்சித்து
தினமும் இறைவனை
இறைஞ்சி நிற்கின்றோம் அம்மா
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்...
தகவல்:
குடும்பத்தினர்