1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 09-08-2020
யாழ். காரைநகர் பலகாடைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley Alperton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் தவநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!
உங்களை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்
நான் அழும்போது என்
கண்ணீர் துடைத்த உன் கரங்கள்
எங்கே அம்மா? இன்று
என் கண்களில் இவ்வளவு
கண்ணீர் வடிகிறதே! கொஞ்சம் என்
கண்ணீரை துடைத்துவிட்டு மீண்டும் உறங்குங்கள்
துடிக்கின்றோம் நாம் இன்று தாயவளே! உனை எண்ணி
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
மாறாது உன் நினைவு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
கணவர், பிள்ளைகள்
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் சண்முகநாதன் தவநிதி அக்காவின் மரண அறிவித்தல் பார்த்தேன்.நானும் கவலையாக உணர்ந்தேன்.இன்றைக்கு தாங்கமுடியாத முடியாத வேதனையை தருவது...