யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் புஸ்பவதி அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீதரணி, ஸ்ரீதர்சினி, ஸ்ரீவரதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஸ்ரீமுரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயமாலா, சேவல்கொடி, உதயகுமார், நளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வாமதேவன்(இராசா டீசல் எஞ்சினியரிங் உரிமையாளர்), தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சோமலிங்கம், பாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ருக்ஷியா, ஜாக் நோலர், ஹரிவிருக்ஷன், நிருஷன், வேணிஷா, சுகேஷ், சுவர்ஷா, ஸ்ரீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2026 ந.ப 12:00 மணியளவில் 68/18, ஸ்ரீவாசா, உப சாந்தசோலை வீதி, பூந்தோட்டம், வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94777147604
- Mobile : +94771881998
- Mobile : +94773124755
- Mobile : +447800884645
- Mobile : +447738126503