Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 SEP 1935
விண்ணில் 03 JAN 2019
அமரர் சண்முகம் சிவகுரு 1935 - 2019 மடத்தடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு மடத்தடி, வவுனிக்குளம் பாலிநகர், வவுனிக்குளம் சிவபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிவகுரு அவர்கள் 03-01-2019  வியாழக்கிழமை அன்று மட்டுவிலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவானந்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, வவா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- மட்டுவில்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரத்தினம்(சுதுமலை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்த நிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனார்த்தனி(ஜனா- கனடா), மெளலீஸ்வரன்(மெளலீஸ்- மட்டுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

மைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

பிரநாத் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில்(மட்டுவில்) நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்