5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி : 03-01-2022
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி கோவிலாகண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேதுகாவலர் கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் நினைவலைகள் ஓயாது வந்து
எம் மனக்கரையை தழுவும் போதெல்லாம்
விழி நனைந்து தவிக்கின்றோம்
மீளாத்துயிலில் நீங்களும்
ஆறாத்துயரில் நாமும் வாழ
படைத்தவன் எழுதிய கணக்கு!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்து தான் போகின்றோம்
அப்பா நீங்கள் இறையடி எய்து
ஐந்தாண்டு நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute