உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி சண்முகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிரி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் அன்னலட்சுமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே… ஆண்டு ஐந்து ஆனதோ நீங்கள் எம்மை விட்டு பிரிந்து... வருடங்கள் ஐந்து கடந்தும் மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில் முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து சென்றுவிட்டீர்களே! மீண்டும் ஒரு பிறப்பிருந்தால் எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள் காத்திருப்போம்!
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது உங்கள் ஆத்மா அமைதிபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!