
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் கமலநாதன் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்(குலம்) இராசம்மா(நீர்வேலி) தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் இலட்சுமியம்மாள் தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ் மாவட்ட செயலகம்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன்(இளைப்பாறிய அதிபர் அத்தியார் இந்து கல்லூரி- நீர்வேலி, மத்திய கல்லூரி- யாழ்ப்பாணம்), செல்வநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரும்,
விக்கினேஸ்வரன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), ஜசிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேணுசன், டானிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
மணிலால்தேவி(இலங்கை), சிவதர்சினி(லண்டன்), ராஜலட்சுமி(இலங்கை), காசிதாஸன்(துபாய்), ஜெயலக்ஷமி(லண்டன்), சிவசுப்பிரமணியம்(ஆனந்தன்-லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் ஓடக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.