Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
ஜனனம் 30 JUL 1954
மரணம் 13 FEB 2025
திரு செல்லையா சிவசுப்பிரமணியம்
வயது 70
திரு செல்லையா சிவசுப்பிரமணியம் 1954 - 2025 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் அம்பாள் வீதி, பிரித்தானியா லண்டன் Canning Town ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அத்தான்..! அத்தான்..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை

31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அத்தான்
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!

எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஓர் மாதம் மறைந்துவிட்டது

கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.

உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் பிராத்திக்கும்
உங்கள் அன்பு மனைவி, சகோதர்கள், மாமிமார், மச்சாள், மச்சான்மார்
பொறமகன்மார், பொறமகள்மார்.

ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31வது நாள் நினைவஞ்சலி வீட்டுக்கிரியைகள் 15-03-2025 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பின்னர், ந.ப 12:30 முதல் பி.ப 03:30 மணிவரை மதிய போசன நிகழ்வு நடைபெற உள்ளது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் , மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். 

முகவரி:
The Renewal Programme (Church),
395 High Street North,
London, E12 6PG
Time- 12.30 pm - 03.30 pm

இங்ஙனம், மனைவி, சகோதர்கள், மாமிமார், மாச்சாள், மாச்சன்மார், பொறமகன்மார் , பொறமகள்மார்.
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.