
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Selliah Apputhurai
1931 -
2020
அமரர் செல்லையா அப்புத்துரை இலங்கை, யாழ்ப்பாணம், அழகிய குப்பிளான் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டமையாலோ தாய்நாட்டிலும், தாய் மொழியிலும் அதிக பற்றும் குடும்பத்தினரில் அதீத அன்பும் அக்கறையும் கொண்டமையால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வது மட்டுமன்றி, அனைவரிடமும் அன்பாய் பழகும் இதயம் கொண்டவரை இழந்து நிற்கின்றோம். எப்போது அவரை சந்தித்தாலும் என் ஊரிற்கு (குப்பிளான்) போய் வீட்டை பார்த்து படம் எடுத்து வாடா தம்பி என அன்புகட்டளை இடும் சத்தம் இப்பவும் காதுகளில் ஒலிக்கின்றது ஐயா. உங்கள் பிரிவால் துயருற்ற குடும்பத்தினரிற்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றோம் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம் பொருளை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

Write Tribute
குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். இப்படிக்கு, சங்கரப்பிள்ளை குடும்பத்தினர் (நீர்வேலி)