யாழ். சாவகக்சேரி நுணாவில் கிழக்கு, கத்தாப்படி வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
நாட்கள் 31 போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில்
விட்டு போனதேனோ!
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
என்னை உன் கண் இமைக்குள் வைத்து
நான் வாழ வழிகாட்டினாய்
எம்மை எல்லாம் திடீரென ஆழாத்துயரில்
ஆழ்த்திவிட்டு சென்றது ஏனோ?
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் அன்புகொள்ள யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03-08-2023 வியாழக்கிழமை அன்று முற்பகல் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 05-08-2023 சனிக்கிழமை அன்று எமது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல:592, ஆனந்தபுரம் கிழக்கு,
இரத்தினபுரம், கிளிநொச்சி.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.