யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகேந்திரம் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி, அழகேஸ்வரி(நீலா– ஆசிரியை), காலஞ்சென்றவர்களான தணிகாசலம், பூபாலசிங்கம்(சின்ராசு – கூட்டுறவு முகாமையாளர்) மற்றும் யோகநாதன்(கிளி), யோகேஸ்வரி(லலிதா- கனடா), தங்கேஸ்வரி(விமலா), நகுலேஸ்வரி(நந்தினி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, நவரத்தினம் மற்றும் கமலாதேவி, சரோஜினி, விஜயபாலன், இரத்தினசிங்கம், மாசிலாமணி, குணரட்ணம்(ராசா), சத்தியவான்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீஸ்கந்தராசா, ஸ்ரீதரன், தர்சிகன், பிரீத்தா, சுமன், நவநீதன், கம்சா, கிரிஷா, மதுஷன், அக்சயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயன்ரா, பிரியன்ரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.