Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 17 DEC 1948
மறைவு 30 APR 2022
அமரர் செல்லத்தம்பி சரோஜினிதேவி
வயது 73
அமரர் செல்லத்தம்பி சரோஜினிதேவி 1948 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சரோஜினிதேவி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 28-05-2022 சனிக்கிழமை அன்று 06:00 மணியளவில் நடைபெற்று வீட்டுக்கிருத்திய கிரியை 30-05-2022 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Bobigny காமாட்சி அம்மன் மண்டபத்தில் 12:00 மணியளவில் நடைபெற உள்ளது. அத்தருணம் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

முகவரி:

காமாட்சி அம்மன் ஆலயம்,
36 Avenue de la Division Leclerc,
93000 Bobigny.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்