

தாயே! செல்லம்மா(எங்கள் சீனியம்மா) நம் எல்லோருக்கும் நீர்தான் தாயம்மா... மக்கள் மருமக்கள் பிள்ளைகள் பேரன்பேத்திமார் உற்றார் உறவினர் எல்லோரும் உங்கள் பிரிவை எண்ணிக் கலங்குகிறோம். பாசத்தின் பிறப்பிடமே பண்பின் சிகரமே! நேசத்தால் எங்கள் நெஞ்சில் நிறைந்து விட்ட நிறைகுடமே மறக்க முடியவில்லை. எங்கள் கண்ணீரை காணிக்கையாக்கி காலடியில் சமர்ப்பிக்கிறோம். எங்கள் சந்ததி சந்தானங்கள் பெருக வேண்டி ஆசிர்வதித்து ஆலோசனை சொல்லி அன்பு கூர்ந்து வழிநடத்திய உங்கள் வெற்றிடத்தை யார் வந்து நிரப்புவார். ஏங்கித்தவிக்கிறோம் எண்ணற்ற நன்மைகள் ஏழை எளியவர்க்கு உதவிடும் மனம். ஆண் பிள்ளையை அப்பு என்று சொல்வீர்கள், பெண்புள்ளையை ஆத்தை என்று அழைப்பீர்கள். இப்படிச்சொல்லி இனி நம்மை யார் அழைப்பார்.தாயே தெய்வத்தின் திருவடியில் உங்கள் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறோம்.?

Sorry to hear the lose of your mum. Accept our heartfelt condolences. May her soul RIP.