
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா துரைராசா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மல்லிகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதினி(லண்டன்), சிவமோகன்(கனடா), வதனி(பிரதி அதிபர்- Hindu primary), இராசமோகன்(லண்டன்), தயாளினி(உதயநகர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரராஜன்(லண்டன்), கவிதா(கனடா), சிம்மேந்திரன்(Kili central college), நந்தினி(லண்டன்), திலகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியசீலன் தனுசா(ஜெயந்திநகர்), ரஜீபன் விதீபா, அபிலயன், பிரவீன், வர்ஷா, அஸ்வின்(லண்டன்), நிரோஜன், கவியரசி, சேயோன்(கனடா), சஜீபா, வினீபா(மருத்துவபீடம்), குணாளினி, அர்ஜீன், சண்கவி(கொழும்பு பல்கலைக்கழகம்), மகரந்தன், நிலாவண்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரிதி, அஸ்வின், அக்சகன், அஸ்வந் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.