Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUL 1948
இறப்பு 09 AUG 2025
திரு செல்லையா அச்சுதபாதசுந்தரம் 1948 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இல- 34, முகாந்திரம் வீதி, கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா அச்சுதபாதசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் பாசமிகு தந்தையே
ஆண்டு ஒன்று ஆனது
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
அழுது அழுது புலம்புகின்றோம்

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

உருவமாகி உணர்வுகளாகி பின்
அருவமாகி எம்முள் இன்னும் அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்