10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சீதாலஷ்மி யோகநாதன்
இறப்பு
- 23 JUL 2012
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சீதாலஷ்மி யோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதுவோ
அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது
வழிந்தோட நீங்கள்
விண்ணகம்
விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!
பொழிந்த உங்கள் பாசத்தினை
எண்ணி
விழியிலே வழிந்தோடும்
நீரதைத் துடைக்க
வழிபார்த்து
வாசலில் காத்துள்ளோம் – மீதிக்காலமதைக்
கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு
ஆண்டுகள் சென்றாலும்
மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
"It's been a decade, but feels like yesterday. We still miss you, we still love you, and we still remember every moment with maama and you."