Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 OCT 1948
இறப்பு 24 JUL 2019
அமரர் செபமாலைமுத்து திரேசம்மா (றஞ்சிதம்)
வயது 70
அமரர் செபமாலைமுத்து திரேசம்மா 1948 - 2019 செல்வபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலை 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலைமுத்து திரேசம்மா அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரயப்பு மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்சல் பவுலீசம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செபமாலை முத்து(அருமை நாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெனி, நிலானி, காலஞ்சென்ற றெக்ஸ்சன், சித்திரா, றீகன், சிந்தனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(லண்டன்), அர்யுனா(கொழும்பு), எட்வின்(பிரதேச சபை பணியாளர்- முல்லைத்தீவு), விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தியோகுப்பிள்ளை, தம்பிராசா, அருள், கிறேஸ், தேவி, ஐயாமணி, யோகராணி, காலஞ்சென்றவர்களான இமெல்டா, அமலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரிய இரிஸ்ரின், திரேசம்மா, ஞானேஸ்வரி, லோறன்ஸ், இராசேஸ்வரி, புஸ்பராணி, உதயராணி, அருள்ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுசன்(லண்டன்), றொமெல், ஆரன், றொக்ஸ்வின், றெக்ஸ்வின், அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-07-2019 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பற்றிமா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices