
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், 11/1 கடற்கரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை மரியதாஸ் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மடுத்திஸ் செபமாலை செஸ்ரின் தம்பதிகளின் அன்பு மகனும், குருஸ்லோரன்ஸ் மாசிலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிறீசா அவர்களின் அன்புக் கணவரும்,
விஜி, றஜி(பிரான்ஸ்), சுகி, சந்திரன்(சுவிஸ்), கமில்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோன்சன், கட்டையப்பா, யோன்சன், மேரிஜெனற்(சுவிஸ்), கிளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பட்டு, சின்னன், பஞ்சு, காலஞ்சென்றவர்களான ரஞ்சி, மகாலிங்கம், சிறிமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புளோரன்சியா(பிரான்ஸ்), சின்னன்(ஜெர்மனி), ரஞ்சி, குஞ்சு, ஜான்சன், பொபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்ரன், பொபிதா, இந்து, ரொக்சி, நீருஜ்யா(பெல்ஜியம்), ஜிவிதா, நிதுசன், ஜொனில்(சுவிஸ்), ஆனந், செபினா, டெனில், டிக்சன்(சுவிஸ்), டினோசன்(சுவிஸ்), டிலானி, ஜஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கர்சி, மேசி, எமி, றியா, டிவேனிக்கா, கியானா, ஜெர்வின், கஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-02-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:30 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.