9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சவரிமுத்து இராயப்பு
இளைப்பாறிய கிராம உத்தியோகத்தர், சமாதான நீதவான்
வயது 81
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு வாகரையைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சவரிமுத்து இராயப்பு அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
நீ இறையடி எய்து ஒன்பது ஆண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
உம் கடமைகளில் நிறைவு கண்டீர்- இன்று
உம் நினைவுகளில் தவிக்கிறோம் நாம்- இன்று
மோட்சம் பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவிக்கிறோம்
இது தகுமோ அப்பா!
உங்கள் ஆன்மா நித்திய இளைப்பாறுதல்
அடைய இறைவனை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute