
யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதுர்சன் செல்வராசா அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்திலிங்கம் இராசம்மா தம்பதிகள், தாவடி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகரெட்னம், தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்.
செல்வராசா(ஈசன்) தழிழரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
கஜானன்(சுவீடன்), கஜானி(சுவாமி விவேகானந்தா கல்வியற்கல்லுரி- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
யோகலிங்கம்(யோகன்- வவுனியா), யோகராணி மற்றும் தழிழ்ச்செல்வி, சுகந்தினி ஆகியோரின் பெறாமகனும்.
செல்வராணி(ராணி- வவுனியா), காலஞ்சென்ற யோகலிங்கம் மற்றும் மகேந்திரராஜா, திருமுகராஜா ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி தெற்கு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.