5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சதாசிவம் சுந்தரம்பிள்ளை
(நடராசா)
வயது 83

அமரர் சதாசிவம் சுந்தரம்பிள்ளை
1934 -
2018
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளை சதாசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் சென்றிருந்தால் என்ன அப்பா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே காற்றாடுதப்பா!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல்
எம்மைதூக்கி விட்ட தந்தையே
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அப்பா
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்