

யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமேஸ்வரி அவர்கள் 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சிவமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
உமாதேவி, சுகந்தி, சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், மகேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேஸ்(ஹரன் புடைவையகம்), சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வநல்லம்மா(செல்வா), காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதுர்ராமன்- துளசினி, சதுர்ணாதேவி, சதுர்த்தினி, யஸ்வினி, வினுஷன், துஷாரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பிராமண உயரப்புலத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. May her soul Rest in Peace. Thinking of you Uma/Acca, Suganthi/ Acca and Sumathy during this time, and our prayers are with you.